Previous Index Next

Upon seeing this, Muruga and Vinayaga anxiously waited to receive the fruit. This fruit (Jñāna Pazham) had unparalleled taste. So the Lord decided to conduct a contest to choose the right person for the fruit. The winner should circle the world first.

Muruga and Vinayaga were astonished by this order for a while but soon got to work. Goddess Uma watched them with a smile.

Let's have the fruit!

மஞ்சள் பொன் போன்ற பளபளக்கும் மாம்பழத்தை தங்களுக்கு இறைவன் தரமாட்டாரா என்று ஆவலுடன் வினாயகரும், முருகப் பெருமானும் காத்திருந்தார்கள். அந்தக் கனியோ தன் மீது தனது அடியார்கள் வைத்திருந்த அன்பின் கனிவை எடுத்துக் காட்டுவதாகவும் இணையில்லாத சுவையும் கொண்டதாக இருந்ததினால் தனது இரு மகன்களுக்கும் ஒரு சோதனை வைத்து அதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பரிசாக அதைத் தருவதாக முடிவு செய்தார். அந்தப் போட்டி என்ன என்றால் ஒரு நொடிப் பொழுதில் இந்த உலகை வலம் வந்து தன் முன் நிற்க வேண்டும் என்பதே. தந்தை இட்டக் கட்டளைக் கேட்ட மைந்தர்கள் ஒருகணம் வியந்தாலும் மறுகணம் உலகை சுற்றி வரச் சென்றார்கள். அதை புன்முறுவலோடு உமையவள் பார்த்துக் கொண்டு நின்றார்.