3878 views 0 comments

பழம் நீ

by on December 21, 2021
 

பழம் நீ

முருகப்பெருமான் கைலாசத்தை விட்டு ஏன் பழனிக்கு வந்தார், பழனிக்கு பழனிக்கு எப்படி பெயர் வந்தது என்பதற்கான விளக்கக் கதை

கைலாயத்தை விட்டு பழனி மலைக்கு முருகப் பெருமான் ஏன் வந்தார் என்பதையும் பழனி மலைக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பதையும் விளக்கும் சித்திரக் கதை.

வானவரும் முனிவர்களும் சிவபெருமான் வாழும் கயிலை மலைக்குச் சென்று அவரை வழிபடுவது வழக்கம். ஒருநாள் அமைதி குழவிக் கொண்டு இருந்த திருக் கைலாய மலையில் முனிவர்கள் தியானத்தில் இருக்க, நந்தி தேவர் சிவன் பார்வதியின் அருளை வேண்டி நின்றிருக்க, முருகப் பெருமான் இறைவனின் பாதத்தின் அடியில் அமர்ந்திருக்க, கணபதியோ தனது துதிக்கையை அசைத்து நர்த்தனம் அடிக் கொண்டு இருக்க அந்தக் காட்சியைக் கண்டு பரமசிவனும் பார்வதியும் ஆனந்தக் களிப்பில் உள்ளம் பறி கொடுத்தவண்ணம் இருந்தார்கள்.

அப்போது வீணையின் நாதத்துடன் நாரதர் ” அரகர சம்போ மகாதேவா’ என்று கூறிக்கொண்டே அங்கு வந்தார். சிவபெருமான் நாரதாரை அருள் கனிந்த பார்வையுடன் வரவேற்றவுடன் இறைவனையும் அம்மையையும் வணங்கிய நாரதர் அவர்களிடம் ஒரு மாம்பழத்தை சமர்பித்தார்.

மஞ்சள் பொன் போன்ற பளபளக்கும் மாம்பழத்தை தங்களுக்கு இறைவன் தரமாட்டாரா என்று ஆவலுடன் வினாயகரும், முருகப் பெருமானும் காத்திருந்தார்கள். அந்தக் கனியோ தன் மீது தனது அடியார்கள் வைத்திருந்த அன்பின் கனிவை எடுத்துக் காட்டுவதாகவும் இணையில்லாத சுவையும் கொண்டதாக இருந்ததினால் தனது இரு மகன்களுக்கும் ஒரு சோதனை வைத்து அதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பரிசாக அதைத் தருவதாக முடிவு செய்தார். அந்தப் போட்டி என்ன என்றால் ஒரு நொடிப் பொழுதில் இந்த உலகை வலம் வந்து தன் முன் நிற்க வேண்டும் என்பதே. தந்தை இட்டக் கட்டளைக் கேட்ட மைந்தர்கள் ஒருகணம் வியந்தாலும் மறுகணம் உலகை சுற்றி வரச் சென்றார்கள். அதை புன்முறுவலோடு உமையவள் பார்த்துக் கொண்டு நின்றார்.

இளமையின் ஆற்றலும், தீரமும், வேகமும் கொண்ட கந்தவேல் எனும் முருகன் ‘ஒரு நொடிப் பொழுதில்தானே இந்த உலகத்தை சுற்றி வர வேண்டும். இதோ என் நீல மயில் மீது அமர்ந்து சுற்றி விட்டு வருகிறேன்’ என எண்ணியபடி உடனே தனது பயணத்தைத் துவங்கினார். தங்க ரதம் போல ரத்தத்தைப் போல இருந்த அந்த நீல மயிலோ தனது சிறகை விரித்துப் அகில உலகையும் சுற்றி வளைத்துப் பறந்தது.

பிரணவ மந்திரத்தின் சொரூபமாய் விளங்கும் மூஷிக வாகனனோ இந்த உலகின் அனைத்து உயிர்களிலும் உள்ளவரே இறைவன் என்பதினால் அம்மையப்பராக அமர்ந்திருந்த தந்தையையும், தாயையும் நொடிப் பொழுதில் சுற்றி வந்து அவர்கள் முன் சென்று அவர்களை வணங்கி நின்றார். ‘விநாயகா, நீ செய்தது என்ன?’ என்று பரமன் கேட்க, கணபதியோ ‘தாங்களே இந்த உலகமாக இருக்கின்றீர்கள்.

உங்களிடத்தில் இருந்துதான் அனைத்து உயிர்களும் பிறப்பு எடுத்து அழிவையும் சந்திக்கின்றன. அதனால் தங்களை வலம் வருவதும் உலகை சுற்றுவதும் ஒன்றே’ என்றார். அதைக் கேட்ட அங்கிருந்த தேவர்களும், பிற கடவுட்களும் அதை பாராட்ட, அம்மையப்பன் உவகை அடைந்து மாம்பழத்தை வினாயகருக்குக் பரிசாகக் கொடுத்து வாழ்த்தினார்.

ஆனைமுகன் கனி பெற்று ஆனந்தம் பெற்ற நேரத்தில் ஆண்ட உலகையும் நொடிப் பொழுதில் வலங் கொண்டு வெகு வேகமாக வந்த வேலன் அந்தப் பழத்தை பெற்றிட தந்தையின் முன்னால் சென்று நின்றார். ஆனால் அதை ஏற்கனவே கணபதிக்கு கொடுத்து விட்டார்கள் என்பதைக் கண்டு மனதில் கோபமுற்ற முருகன் திடுக்கிட்டார். அப்போது சிவபெருமான் ஏற்கனவே நொடிப் பொழுதில் உலகை விநாயகர் வலம் வந்து விட்ட சிறப்பை எடுத்துக் கூறினார். ஆனால் குமரனின் இதயம் இந்த விளக்கத்தை ஏற்காமல் குமுறியது. துடிதுடித்த அவருடைய செவ்விதழ்கள் துடித்துச் குங்குமம் போலச் சிவந்தன.

முருகப் பெருமான் கோபத்தோடு மயில் மீது ஏறி அமரச் சென்றார். அதைக் கண்ட பார்வதி அம்மையின் தாய்மை உள்ளம் பதைபதைத்தது. அதை கண்டு அவர் அருகில் ஓடி வந்த பார்வதி ”கண்ணே, கதிர்வேலா நில்” என்று அழைத்தபடி கையேந்தி முருகனை தனது மார்புடன் தவிழ வந்தாள். அதே சமயம் விநாயகர் என்ன செய்வது எனக் குழம்பித் தடுமாறி நின்றார். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் குமரனோ மயில்மீது ஏறி அமர்ந்து கொண்டு அங்கிருந்து பறந்து சென்றார். நடந்த நாடகம் உலக மக்களின் நன்மைக்காக நடந்த நிகழ்ச்சி. அது கடவுளின் ஒரு ‘அருள் விளையாட்டு’. இக்கோபத்தை ‘அருட் கோபம்’ என்று கூடக் கூறலாம்

கயிலையில் இருந்து புறப்பட்ட முருகன் தென் கோடியில் இருந்த திருவானினன் எனும் திருததலத்தில் உள்ள குன்றின் மீது குடி அமர்ந்தார். ஷண்முகனின் சினத்தைத் தணித்து சமாதானப்படுத்த சிவனும்,சக்தியும் திருவாவினன் குடிலில் வந்து எழுந்தருளினார்கள். ‘நீயே பழம், நீயே பழம்…ஆகவே இனி அந்தப் பழத்தைக் குறித்து நீ நினைக்காதே’ என்று கூறி அவரை சமாதானப் படுத்தினார்கள். அதைக் கேட்டு சமாதானம் அடைந்த முருகனும் அங்கிருந்தபடியே அனைவருக்கும் அருள் புரிந்து வரலானார்.


“முருகா…உன்னை நாங்கள் உளமாற விரும்புகிறோம்”